
சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு போட்டுள்ளது. அதாவது நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் நடித்த திரைப்படத்திற்காக வாங்கிய 3.74 கோடி கடனை வட்டியுடன் செலுத்த தவறியதால் தனபாக்கியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 9.39 கோடி தனபாக்கியம் நிறுவனத்திற்கு வட்டியுடன் துஷ்யந்த் பணம் கொடுக்க வேண்டும். மேலும் இந்த பணத்தை அவர் செலுத்த தவறியதால் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.