
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே தமிழகத்திலிருந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 4 தடகள வீரர்கள் தேர்வாகியிருந்த நிலையில் தற்போது 5-வது நபராக ஜெஸ்வின் தேர்வாகியுள்ளார். மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் தமிழகத்திலிருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.