
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 3,49,697 பேரும், மாணவிகள் 4,05,753 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களும் இந்த கல்வி ஆண்டு உயர் கல்வியில் சேரும் வகையில் துணைத்தேர்வு தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி +2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் துவண்டு விடாமல் விடாமுயற்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து துணைத்தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.