தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா என்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, நெல்லை ,தூத்துக்குடி, குமரி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் சமீபத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அரசின் புதிய அறிவிப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.