இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தற்போது அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வருகிற 18ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி ராமநாதபுரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, காரைக்கால், புதுச்சேரி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.