
வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேளைகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாடே கலவர பூமியாக மாறிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வங்காளதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்ததால் நடந்த போராட்டத்தால் 130 மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் உடனடியாக போராட்டத்தை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் தற்போது இட ஒதுக்கிடையும் ரத்து செய்து உச்சநீதிமன்ற முத்தரவிட்டுள்ளது.