பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, “உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் மசோதாவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.

அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன் என கூறியுள்ளார்.