
தமிழகத்தில் இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
அதாவது கனிமொழி என்ற பெண் (49) வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றார். அப்போது அவருடைய முன்னாள் கணவர் ஏழுமலை (52) அங்கு வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கனிமொழியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் மடக்கிப் படித்துவிட்டனர். இதைத்தொடர்ந்து கனிமொழிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.