
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் தற்போது 100 கிராம் எடைஅதிகமாக இருந்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஒலிம்பிக் கூட்டமைப்பு விக்னேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது மிகவும் வருத்தத்தை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது என்று கூறிய இருந்தது.
இந்நிலையில் இரவு முழுவதும் உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்டதால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் உடல் எடையை குறைக்க தொடர்ந்து பயிற்சி செய்து ஒரே இரவில் 1.85 கிலோ எடையை குறைத்தாக கூறபடுகிறது.