
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட இவர் பொய்யான பத்திர தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ஏப்.1ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.