மோகன்லால்- ன் எம்புரான் படத்திற்கு தடை விதிக்க கோரி கேரளா உயர் நீதிமன்றத்தை, திருச்சூர் முன்னாள் கமிட்டி உறுப்பினரான விஜேஷ் அணுகியுள்ளார். இவர் தற்போது மாவட்ட கமிட்டி உறுப்பினராக இருப்பதாக குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எம்புரான் படத்தால் எங்கேயும் ஒரு இடத்திலாவது வன்முறை ஏற்பட்டுள்ளதா? என வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி விஜேஷிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீங்கள் எம்புரான் படத்தை பார்த்து விட்டீர்களா> உங்கள் ஆட்சேபனை என்ன? இது விளம்பரத்திற்காக போடப்பட்ட மனு என கண்டித்த அவர் கோடை விடுமுறைக்கு பின் வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.