இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா ஒரு பரபரப்பான குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தது. அதாவது நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குரு பத்வந்த் குன்னுவை கொலை செய்ய அவர் சதி செய்ததாக FBI அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. இதற்காக நிகில் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க இந்தியா குழு அமைப்பதாக உறுதி கொடுத்திருந்த நிலையில் தற்போது இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவை டெல்லியில் வைத்து சிறப்பு தனி படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை குற்ற பத்திரிக்கையில் புகைப்படத்துடன் கூடிய குற்றவாளியாக விகாஷ் யாதவை அறிவித்திருந்தது. அவர் மீது கூலிக்கு கொலை செய்தல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது டெல்லியில் சிறப்பு தனி படை போலீஸ் சார் விகாஷ் யாதவை கைது செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.