தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி உதகைக்கு வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 சுற்றளவு வாகனங்களும் மட்டுமே இயக்க வேண்டும்.

அதேபோன்று கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் அரசு பேருந்து, ரயில்கள் மூலம் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதோடு உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. இந்த கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25-ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கு வருகிற ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.