கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 51 வயது கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 24 வயதில் மகள், 22 வயதில் மகன், 19 வயதில் மகன், 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றனர். இதில் கடைசி மகள் மட்டும் பொள்ளாச்சியில் தந்தை பராமரிப்பில் இருந்துள்ளார். மற்ற மூன்று பேரும் புதுக்கோட்டையில் தாயுடன் வசித்து வந்தனர். தந்தையுடன் வசித்து வந்த சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்திடம் சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி எட்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அது விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலம் சரியில்லாததால் சிறுமி புதுக்கோட்டையில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது தங்கை என்று கூட பார்க்காமல் சிறுமியின் 22 வயது சகோதரன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். நேற்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 22 வயது சகோதரர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.