மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது. அதன் பிறகு ஆறாண்டு திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து மற்றும் மைசூர் பருப்புகளின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.‌ மேலும் பீகாரில் தாமரை விதைகளுக்கு புதிய வாரியம் அமைக்கப்படும் என்று கூறினார்.