
அதிமுக கட்சி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்கு தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடமிருந்து 1.3 கோடி மற்றும் சொகுசு கார்கள் உள்ளிட்ட பல பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என சுகேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இன்னும் பல வழக்குகள் அவர் மீது இருப்பதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.