கணவன்-மனைவி தகராறு….. போலீஸ்காரரின் விரலை கடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குத்திபாறையில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபு கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் வசிக்கும்…

Read more

கல்லூரி பஸ் மோதி இழுத்து செல்லப்பட்ட மொபட்…. தந்தை-மகன் பலி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியில் விவசாயியான தங்கவேல்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தகுமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்வதற்காக தனது தந்தையுடன் மொபட்டில் கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவல் வைத்து…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மோகன் குமார், ஷோபனா, மோகன் குமாரின் தாய் மணி ஆகியோர் தங்களுக்கு அரசு உயர் பதவியில் இருப்பவர்களை…

Read more

பள்ளியில் படிக்கும் போது எடுத்த சபதம்…. வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த கோவை வாலிபர்…. வாழ்த்திய உறவினர்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் பகுதியில் தண்டபாணி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சவுத்ரி ராஜ்(30) ரோபோடிக் இன்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிற்கு ராஜ் வேலைக்கு சென்றபோது டனியாலா(30) என்ற பெண்ணுடன்…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் சிக்கிய கார்டு…. உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட் பீல்டு சாலையில் ஜான் சேவியர் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் புலியகுளம் தாமு நகர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று 14 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தார். இதனையடுத்து ஜானின்…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.…

Read more

20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இறப்பு…. வனத்துறையினர் கூறிய தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்குள் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் வேலைக்கு சென்று வரும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் சிரமப்படுகின்றனர். கடந்த 2 நாட்களாக கக்கன் காலனி, எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் 20-க்கும்…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் முகமது ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான பஞ்சு மெத்தைகளை அடுக்கி வைத்துள்ளனர். நேற்று காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை…

Read more

தனியார் சேவை மைய இலவச எண்…. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் உமர் நகரில் வாடகை ஆட்டோ தொடர்பாக தனியார் சேவை மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மையத்திற்கு இலவச எண்ணும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 எண்களில் இருந்து சேவை மைய இலவச எண்ணுக்கு…

Read more

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பாளையத்தில் சிவசுப்பிரமணியன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசுப்பிரமணியம் கப்பளாங்கரையிலிருந்து தேவணாம்பாளையம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள்…

Read more

தொழில் தொடர்பான தகராறு…. 3 பேருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் ஜி.எம் நகரில் கனி(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகே பானிபூரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனிக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் சர்புதீன்(29), ஆசாத்(32) ஆகியிருக்கும்…

Read more

கோவை: கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

கோவை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்நிலையில், கேரளாவில்…

Read more

சோலார் பேனல் அமைக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூரில் இருக்கும் ஜெயந்தி மசாலா நிறுவன கட்டிடம் மேற்கூரையில் வேலூரை சேர்ந்த நந்தகுமார்(34) உள்ளிட்ட தொழிலாளர்கள் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரையில் நந்தகுமார் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று சந்தை  நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டி…

Read more

இனி கோவையில் மது வாங்கினால்ரூ.10 அதிகம் கொடுக்கணும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

நீலகிரியில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனைப் போலவே பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்…

Read more

முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ மில் வீதியில் முருகானந்தம்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகானந்தத்தின் மனைவியும், மகனும் வெளியே சென்று விட்டனர் இதனையடுத்த மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த முருகானந்தம்…

Read more

கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. கணவன், மனைவியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் விசைத்தறி தொழிலாளியான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம்…

Read more

போலியாக மெயில் அனுப்பி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ரபேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அந்த நிறுவன முதன்மை மேலாளர் கருணாகரன் என்பவரது பெயரில் ரபேலுக்கு மெயில் வந்தது. அதில் அவசரமாக…

Read more

“ஆபாச வீடியோ எடுத்து வெளியிடுவோம்”…. 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் 47 வயதுடைய பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4 பேர் அழகு நிலையத்திற்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் அந்த…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. தடுப்பணையில் குளிப்பதற்கு தடை…. போலீசாரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 120 அடி கொள்ளளவு உடைய ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை அமைந்துள்ளது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுழல், சேறு, சகதி இருக்கும் இடம் தெரியாமல் தடுப்பணையில் இறங்கி ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் போலீசார்…

Read more

கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை….. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக…

Read more

கோவை “முதல் பெண் பஸ் ஓட்டுநர்”…. அசத்தும் இளம்பெண்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் சர்மிளா (24) என்ற பெண் தனியார் பேருந்து இயக்கி வருகிறார். இவர்தான் கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுனராக இருக்கிறார். இதுகுறித்து சர்மிளா கூறியதாவது, எனது தந்தை மகேஷ் ஆட்டோ டிரைவராக…

Read more

  • April 1, 2023
“ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல பெண்கள்” கோவையில் முதன்முறையாக பேருந்து ஓட்டும் இளம்பெண்… குவியும் பாராட்டுக்கள்..!!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் உடைய மகள் ஷர்மிளா. 24 வயதான இவர் தன்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுவதை பார்த்து பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்துள்ளது. அதனால் தன்னுடைய…

Read more

வழக்குபதிவு செய்யாமல் இருக்க லஞ்சம்…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்தமநாயக்கன் பாளையத்தில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சலிங்கம் என்ற மகன் இருக்கிறார். கடந்த 22-ஆம் தேதி டிப்பர் லாரியை நிறுத்துவது சம்பந்தமாக பஞ்சலிங்கத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜெயபிரகாஷ், அவரது தாய் ஆகியோருக்கும் இடையே தகராறு…

Read more

காய்கறி வாங்க சென்ற வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறி வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காய்கறி வாங்குவதற்காக சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம்…

Read more

கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு 17-ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் வெள்ளமலை எஸ்டேட் மட்டம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை…. சுற்றுலா தலங்களை பார்வையிட்ட ஜெர்மன் தம்பதி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்கு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிங்கப்பூர், ஜெர்மன், பிரான்ஸ், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜெர்மன் நாட்டு…

Read more

திருமணம் செய்து கொண்டது போல புகைப்படம்…. கல்லூரி மாணவியை ஏமாற்றிய காதலன்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் 18 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் ஈச்சனாரி பகுதியில் வசிக்கும் தனியார் கூரியர் நிறுவன ஊழியரான அஜய் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

Read more

பெண் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை…. உறவினர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி(54) நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கமணியின் உறவினரான மளிகை கடை…

Read more

கல்லூரி மாணவி மீது தாக்குதல்…. ஆட்டோ டிரைவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கோவை அறிவொளி நகரை சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர்…

Read more

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பட்டதாரியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் வந்தது. இதனை பார்த்த ரஞ்சித் குமார் பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

கஞ்சா பழக்கத்தினால் நட்பு…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் இருக்கும் தனியார் கல்லூரி முன்பு இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக…

Read more

அலறி சத்தம் போட்ட சிறுமி…. நண்பரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமியின் தந்தை நண்பரான காளீஸ்வரன்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. இன்ஜினியரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் மருதாச்சலம் தெருவில் சிவில் இன்ஜினியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரணவ்(19) தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி பிரேம்குமார் தனது மனைவியுடன் உறவினர்…

Read more

கொடூரம்….! கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் படுகொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி(54) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுக்கும், மகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று காலை சுப்பிரமணி சொந்த…

Read more

அரசு அதிகாரிகளின் துணையுடன் நிலம் மோசடி….? ஆதிவாசி மக்களின் குற்றசாட்டு…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு ஆதிவாசி கிராம சபைகளின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,…

Read more

மிரட்டும் நிதி நிறுவனத்தினர்…. ஆட்டோ டிரைவர் வாங்கிய கடன்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிங்காநல்லூரில் வசிக்கும் பார்வதி என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனப்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பழனிச்சாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டுள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. விபத்தில் சிக்கி பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மாரியம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாரியம்மாளை…

Read more

பேச மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் ஸ்ரீராம்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுந்தராபுரத்தில் இருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 19 வயது இளம் பெண்ணுடன் பழக்கம்…

Read more

மக்களே உஷார்…! 10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துடியலூரில் டீக்கடை நடத்தி வரும் பிரசன்னா, அவரது மனைவி நிரஞ்சனா ஆகியோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

“டீக்கடை மூலம் உருவாகிய நெட்வொர்க்”..‌‌.. பல பேரிடம் மோசடி… கோவையை உலுக்கிய இளம்பெண் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

“பணத்தை இரட்டிபாக்கி தருகிறேன்”…. நண்பரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் வ.உ.சி நகரில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான முனிராஜ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லு பட்டியில் இருக்கிறார். இந்நிலையில் முனிராஜ் தனது நண்பர் லோகநாதரிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி…

Read more

பெண் பாலியல் பலாத்கார வழக்கு…. நிதி நிறுவன மேலாளருக்கு கிடைத்த தண்டணை…. நீதிமன்றத்தின் உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நெல்லையை சேர்ந்த 35 வயதுடைய பெண் தனியாக குடியிருந்து டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் குழுவுக்கு கடன் வாங்குவது தொடர்பாக கோவை ஒண்டிப்புதூரில் இருக்கும் தனியார்…

Read more

மக்களே உஷார்….! அதிக லாபம் தருவதாக கூறி ஐ.டி ஊழியரிடம் ரூ.19 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் ஐ.டி ஊழியரான பிரதி(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,…

Read more

காதலர்களை மிரட்டி செல்போன் பறிப்பு…. 4 பேரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமானோர் அங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காதலர்களிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம்,…

Read more

மக்களே உஷார்….! ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.8 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் யுவ பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவ பிரசாந்தின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பணம்…

Read more

பின் தொடர்ந்து தொந்தரவு…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பட்டி காலனியில் 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அவர்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில்…

Read more

Other Story