பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம் முகவரி கேட்பது போல நடித்து 5 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அகிலாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தென்னை மரத்தில் தேங்காய் பறித்த 10-ம் வகுப்பு மாணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… தென்காசியில் சோகம்…!!!
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மகன் அமர்நாத் (வயது 15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக…
Read moreஅரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “ஓடும் பேருந்தில் திக் திக் நிமிடங்கள்”… நடத்துனர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!
கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த…
Read more