
மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் மேலும் வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சரின் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், #Elections2024க்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன்:
கோவை மாநகரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் பங்களிப்புடன், கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். எமது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார், இந்த மைதானம் சென்னையின் சின்னமான MAC ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச-தரமான கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும்.
நமது அரசும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ள்ளார்” என தெரிவித்துள்ளார்.
As a sports and cricket enthusiast, I would like to add one more promise to our election manifesto for #Elections2024:
🏏🏟️ We will take efforts to establish a state-of-the-art cricket stadium in Coimbatore, with the active participation of the sports loving people of… https://t.co/B6rpHJKSBI
— M.K.Stalin (@mkstalin) April 7, 2024