ஆந்திரா பிரகாசம் மாவட்டம் தர்ஷி பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் குண்டூரில் உள்ள சமூக நலத்துறை அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்து பார்மசி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியாக மாடிக்குச் சென்ற மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பார்த்த விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகள் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி கலெக்டரிடம் தெரிவித்தார்.

அதோடு விடுதி வார்டன் மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதற்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து கலெக்டர் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவர், அவரது உறவினர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்துள்ளதாகவும், அதனால்தான் கர்ப்பமானதாகவும், இது வெளியே தெரியாமல் இருப்பதற்காக இறுகிய ஆடைகளை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த உறவினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.