ஆந்திரா துணை முதல் மந்திரியும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் திருப்பதி கோவில் நடுவில் உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாகவும், அந்த லட்டுகளை அயோத்திக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.எ பால் ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சா குட்டா காவல் நிலையத்தில் பவன் கல்யாண் மீது புகார் அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பவன் கல்யாண் பேச்சு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு விலங்குகள் கொழுப்பு கலந்த ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து அனுப்பியதாக கூறியுள்ளார். ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சி நடந்தது. ஆனால் லட்டுவில் கலப்படம் செய்த விஷயத்தை ஜூலை மாதத்தில் தான் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அப்படி இருக்க ஜனவரியில் திருப்பதி லட்டுவில் கலப்படம் நடந்தது இவருக்கு எப்படி தெரியும்? சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் பவன் கல்யாண் மீது புதிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் மனு அனுப்பியுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.