ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினர். இதை கண்டித்து, இந்த பிரச்சனை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து மீனவர்கள் தீக்குளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இராமேஸ்வரம் மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.