திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்துகாமராஜர் நகரில் சிவன் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(27) என்ற மகன் இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் சிவசங்கர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் சிவசங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிவசங்கரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிவசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.