சேலம் மாவட்டத்தில் உள்ள தேங்காய் கொட்டை முசரன் வலவு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசனும்(20), அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ்(23) என்பவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு சீனிவாசனும், விக்னேஷும் பாலியல் தொந்தரவு அளித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து மூதாட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் விக்னேஷ், சீனிவாசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.