
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு அனைவரும் மைதானத்தில் காத்திருக்கும் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகம், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று சஸ்பென்ஸ் உடன் தெரிவித்துள்ளது. அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.