அதிமுகவினுடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:35 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்திலே இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக அழைப்பிதழ் அளிக்கப்படும் என்றும் பத்திரிகையாளர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் மிக மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினுடைய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் நடத்தக்கூடிய ஒரு முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது.

ஒரு கட்சியினுடைய பிரதான கூட்டம் என்பது பொதுக்குழு கூட்டம் தான். ஏனென்றால் பொதுக்குழு கூட்டத்தில் தான் மிக மிக முக்கியமான முடிவுகள் எல்லாம் எடுக்கப்படும். கட்சியில் மாற்றங்கள் இருந்தாலும்,  பொறுப்புகள் மாற்றம் அல்லது கட்சியில் அறிவிக்கப்படக்கூடிய தீர்மானங்கள் போன்றவை எல்லாம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படும். இது அந்த கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற  கட்சிகளும் இந்த பொது குழுவில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.