
டெல்லிக்கு போறீங்க ? எந்த மாதிரியான சூழல் நிலவும் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
டெல்லியில் போகின்றேன் எந்த மாதிரியான சூழல் நிலவ போகிறது. என்ன போட்டி பரீட்சை தேர்வு, யுபிஎஸ்சி, இன்டர்வியூ, என ஆறு பேரு ஷேர் போட்டு உட்கார வைத்து இன்டர்வியூ சேர்ல உட்கார வைத்து கேள்வி கேட்க போறாங்களா ? டெல்லிக்கு போனாலும் அப்படித்தான் இருப்பேன். போகலைன்னாலும் அப்படித்தான் இருப்பேன். ரெண்டு வருஷமா நீங்க என்ன பார்த்து இருப்பீங்க.. ஏதாவது மாத்தி பேசுறானா ? என தெரிவித்தார்.
அண்ணா குறித்து நீங்க பேசிய பேச்சு தான் கூட்டணி முறிவுக்கு காரணம் என சொல்லுறாங்க. உங்க கட்சி தலைமை ஏதேனும் விளக்கம் கேட்டதா என்ற கேள்விக்கு,
இதுவரை கேட்கவில்லை என்று கூறிய அண்ணாமலை, தலைமை கேட்டா என்ன சொல்வீர்கள் என்று கேட்டபோது, கேட்டால் சொல்வேன். கொஸ்டின் பேப்பர்ல கொஸ்டின் இருந்தா ஆன்சர் எழுதனும். கொஸ்டின் கேடா ஆன்சர் பண்றேன் என தெரிவித்தார்..