
ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த விழாவில் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக அவர் நாளை இரவு விமான மூலம் மதுரை செல்கிறார். இதைத்தொடர்ந்து அன்று இரவு மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அங்கிருந்து பசும்பொன் கிராமத்திற்கு செல்ல இருக்கிறார்.
இந்நிலையில் அவரது வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர மாவட்ட எல்லைக்குள் நாளை மற்றும் மறுநாள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.