நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவராண்யேஸ்வரர் பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டத்தை ஒட்டி தேவரானியம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வருகிற மார்ச் 10ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதனால் அந்த தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.