தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுவன் இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து அச்சிறுவனை உறவினர்கள் தேடத் தொடங்கினார். இந்நிலையில் சிறுவன் சாம்பவர் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செல்போன் அதிகமாக பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.