
மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம் மதிமுகவினர் தனி தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்நிலையில் எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மல்லை சத்யா கூறியதாவது, நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியிலிருந்து நீக்கி விடுங்கள். துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக நான் தயார். கடைசி வரை தலைவரின் தொண்டனாகவே இருந்துவிட்டு செல்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் துரை வைகோவை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது நான் தான் என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் மதிமுகவிற்கும், எனக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று மல்லை சத்தியா கூறியுள்ளார். அவர் கூறிய வாக்குறுதி அடிப்படையில் எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன். நானும் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார். அதன் பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இருவரின் கையைப் பிடித்து சமரசம் செய்து வைத்தார்.