
இந்தியாவில் உயர்கல்வி படிக்க ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் விருன்புகின்றனர். இதனால் அவர்களுக்கென்று இ ஸ்டூடன்ட், இ ஸ்டுடென்ட் எக்ஸ் என்ற 2 சிறப்பு பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்க உள்ளது. இதற்காக ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.
அதன் பின் அந்த சேர்க்கை கடிதம் கிடைத்த பிறகு, அவர்கள் விசாவுக்கு அதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு இ ஸ்டூடண்ட் விசா அளிக்கப்படும். அவர்களை சார்ந்தவர்களுக்கு இ ஸ்டுடென்ட் எக்ஸ் என்ற விசா அளிக்கப்படும். படிப்பின் கால அளவை பொறுத்து 5 ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும். அதன் பிறகு அதை நீடித்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.