சென்னை சென்ட்ரல் அருகே விக்டோரியா அரங்கை புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சிலர் திரவுபதி அம்மன் கோவிலை கூறி அரசியல் செய்கிறார்கள்.

அந்த கோயிலில் பூஜைகள் நடத்தப்படுவதற்கான அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அக்கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு முன்னதாக அக்கோவிலை திறக்கவில்லை என்றால் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.