
தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் தனது பேக்கின் மீது தலை வைத்து படுத்து கிடந்து செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திடீரென ஒரு பல்லி அவரது கைகளில் ஊர்ந்து சென்றது. இதனை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த பல்லி அவரது மார்பின் மீது ஏறி சென்றது. அப்போது அதனைப் பார்த்து அந்த சிறுவன் சிறிதும் பயமின்றி அந்தப் பல்லியை தனது கையை கொண்டு தட்டி விட்டார். அதன் பிறகு மீண்டும் தனது செல்போனை பார்க்க ஆரம்பித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram