
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளிபட்டியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கேசவன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மருமகள் இருக்கின்றனர். நேற்று மாலை கேசவன் தனது பழைய வீட்டிற்கு சென்று பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கேசவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.