
ஆர்பிஎப் தேர்வை அடுத்து எஸ்எஸ்சி தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL – Combined Higher Secondary Level Exam) போன்ற தேர்வுகளை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகமானத அனுமதி வழங்கியுள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு தேர்வுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில், இனிமேல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வரும் மே 2-ம் தேதி துவங்கவுள்ளது. முன்பாக சி.ஆர்.பி.எப் தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.