
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டி துபாயில் தலை மறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஞ்வனுக்கு சி பி சி ஐ டி காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள அள்ளூர் வயல் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட தனது பணியாளர்களுக்கு சஞ்சீவன் கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்துள்ளார். இதில் 3- வது குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் துபாய்க்கு சென்று தலைமறைவாகி உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.