
விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இசைஞானியை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, இசைஞானி அவர்களை சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது. அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்கு புரிய வைக்கிறார்.
“இசை எனக்கு தொழில் அல்ல; இசை எண்ணிலிருந்து வேரல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன் என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளில் இருந்து வீசும் ஞானஒளியை உணர முடிகிறது. அது- தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல; தன்னை உணர்ந்துள்ள மெய்ஞானத்தின் புலப்பாடு! அவர் இசைஞானி என்பதைவிட மெய்ஞானி என்பதே பொருந்தும் என்று பதிவிட்டுள்ளார்.