
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இரட்டை பாலம் அருகே தனியார் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பில் இருக்கும் கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னந்தோப்பு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த முதியவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டனர்.
இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.