கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் துறை பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபின் விக்டர்(30) என்ற மகன் இருந்துள்ளார். மீனவரான சுவின் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபின் நேற்று முன்தினம் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்துள்ளார். இதனை சுபனின் மனைவி டோனி (22) கண்டித்ததார்.

இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் சுபின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டோனி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுபின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.