திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட கட்சிப் பொறுப்புகளில் மாற்றங்களும், நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில அறிவிப்புகளும் வெளியாகும்.

முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும் என கூறியுள்ளார்.