கனடா நாட்டின்  பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ ஏற்கனவே தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது அவர் அதிகாரபூர்வமாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் கனடா நாட்டின் பிரதமராக இருந்த நிலையில் அதனை அவர் பெருமையாக கருதியதோடு ட்ரம்பின் கொள்கைகளை குறிப்பிட்டு தேவைப்பட்டால் நாட்டுக்காக போராட கூட தான் தயார் என்றார்.

இந்நிலையில் சொந்த கட்சிகளின் அழுத்தம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்து விட்டார். இதனால் கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவி ஏற்கிறார். மேலும் லிபரல் கட்சியின் தலைவராக இருக்கும் மார்க் கார்னி கனடாவின் 24 ஆவது பிரதமராக விரைவில் பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.