தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் திமுக அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆறாம் தேதி அன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின் முடிவாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களை பணியாற்றுதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் தரப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை மூலம் நடந்த முறைகேடுகள் பற்றி ஒரு பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது முறைகேடு செய்வதில் பெரும் அனுபவம் வாய்ந்த கைதேர்ந்த நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அர்த்தம் கொள்ள தோன்றுகிறது. அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் நடந்த கணக்கில் வராத பணம் மோசடி குறித்து பயன்படுத்தி உள்ள வார்த்தைகளை பார்த்தால் வெற்று  விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஒரு ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது எனக் கூறியுள்ளார். இதோ அந்த முழு அறிக்கை…