
பாரிசில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 20 பதக்கங்களை குவித்துள்ளது. இதற்கு முன்பு 19 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற போட்டியில் மட்டும் 5 பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் வென்றுள்ளனர். அதன்படி நேற்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் சரத்குமார் வெள்ளிப் பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கமும் வென்றார். பாரா ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்தியா இதுவரை 3 தங்க பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
அதன்படி மொத்தமாக இந்தியா 20 பதக்கங்களை வென்றுள்ளது. தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் சிறப்பான முறையில் விளையாடிய பதக்கங்களை குவித்து வருகிறார்கள். மேலும் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் தீப்தி ஜீவன் ஜி வெண்கல பதக்கமும், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அஜித் சிங் வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் வெண்கல பதக்கமும் வென்றார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 முறை பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.