
பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றது. கடந்த 1978-ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் பட்டப்படிப்பு பெற்றதாக தேர்தல் பிரமாண பாத்திரங்களில் பிரதமர் மோடி கூறியிருந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு நீரஜ் சர்மா என்பவர் ஆர்டிஐ மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-ஆம் ஆண்டு படித்தவர்களின் விவரங்களை கேட்டு கேட்டபோது தனிநபர் விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் அளிக்க முடியாது என டெல்லி பல்கலைக்கழகம் கூறியது. இதனை எதிர்த்து அந்த நபர் மத்திய தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார்.
அதனை விசாரித்த தகவல் ஆணையம் டெல்லி பல்கலைக்கழகம் உரிய ஆவணங்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்ட தயாராக உள்ளோம். ஆனால் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் பதில் அளித்துள்ளது.