
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, அறிவுசார் சொத்து உரிமையான புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்நுடனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ரூபாய் 5 கோடி செலவில் அமைக்கப்படும்.
காஞ்சிபுரத்தின் பழந்தண்டலத்தில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்க ரூபாய் 5 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தொழில் பேட்டையில் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ரூபாய் 3.90 கோடி செலவில் அமைக்கப்படும்.
குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உள்நாட்டில் நடைபெறும் வர்த்தக கண்காட்சி பங்கேற்க வழங்கப்படும் நிதியுதவி 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என கூறியுள்ளார்.