மியான்மரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2000 பேர் வரை உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பகல் 12.38 மணிக்கு மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.