
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில் உங்களோடு பேசவே இக்கடிதம். இன்று ஒரு வெற்றி பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கம். தமிழக வெற்றிக்கழகம் என்னும் அரசியல் பெரும்படையை கட்டமைத்தது பற்றி அறிவித்து. இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வந்த நாம் அரசியல் களத்தை கையாள தொடங்கி இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில். கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் அளந்து நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.
மக்களுக்கான அரசியலை மக்களோடு மக்களாக நிற்பதை மக்களுடன் நின்று அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவானது. அதில்தான் கழகத்தின் ஐம்பெரும் கொள்கை தலைவர்களை மத சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல் திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக அரசியல் களத்தில் அத்தனை திசைகளையும் அதிரவைத்தோம். இதோ இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை ஏகடிகளை கடந்திருப்போம்.
எதற்கும் அஞ்சாமல் எதை கண்டும் பதறாமல் நம் கருத்தில் கருத்தியலிலும் நின்று நிதானித்து நேர்மையாக நடைபெற்று வருகிறோம். குடியுரிமை சட்ட திருத்தம் தொடங்கி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலை தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம் தனி மனிதர்களை விட தனித்து உயர்ந்தது மக்கள் அரசியல் மட்டுமே. தொடரும் இப்பயணத்தில் கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.
அதன் வெளிப்பாடாகத்தான் நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமை கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம். தமிழக வெற்றி கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல் மையப்படுத்தி மக்கள் மத்தியில் அவர்களுக்கென தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவது எப்போதும் நமது இலக்காக இருக்கும். இந்த இலக்கின் முதல் படி தான் வருகிற 2026 தேர்தல். இந்த வேளையில் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் பொருட்டு தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்ட பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணி வாயிலாக நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு வீடு விடாமல் தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திற கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும் இருந்தும் உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோர்த்து நமது வலிமையை நாட்டுக்கு பறைசாற்றி அதிகார பகிருடன் கூடிய ஆகப்பெறும் ஜனநாயக பெரு நிகழ்வை தமிழகத்தில் உருவாக்கி காட்டப் போகிறோம்.
அந்த அரசியல் பேரி இலக்கை நோக்கி நீங்கள் இப்போதே உழைக்க தொடங்க வேண்டும். மக்களோடு சேர்ந்து மக்களோடு மக்களாக தொடர்ந்து உழைத்தால் தான் தமிழக அரசியலில் கிழக்கு திசையாகவும் கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக்கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றிய காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல் உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பது தான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி.