
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமுதா சுமார் 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் வேலை பார்க்கிறார். அமுதா வடகிழக்கு பருவ மழை தரவுகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.