விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து கோவிலுக்கு சென்ற பெண்கள் உட்பட 150 பக்தர்கள், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ள பெருக்கால் சிக்கி தவித்த பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.